கனடாவில் கொரோனா 5வது அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பொது மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ (Justin Trudeau) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற தொடங்கியுள்ளதுடன், கனடாவில் பாதிப்புகள் சில தினங்களாக தீவிரமடைய தொடங்கியுள்ளன.
இந் நிலையில், கனடா எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடி குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) விளக்கம் அளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களால் மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் விரக்தியடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.