ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 69 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரி, கடந்த 13 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 30ஆம் திகதி ராமேஸ்வரம் மீனவர்களுடன் பேச்சு நடத்திய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது காலவரையற்ற போராட்டத்தை திரும்ப பெற்றதுடன், ராமேஸ்வரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர்.