பருத்தித்துறையில் கஞ்சா மீட்பு
521 ஆவது படைப்பிரிவு இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதியில் இருந்து இன்று அதிகாலை 95 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலதிக விசாரனையினை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.