Welcome to Jettamil

ரஷ்ய விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைப்பு

Share

சுமார் 200 பயணிகளுடன் மொஸ்கோவுக்கு புறப்படவிருந்த ரஷ்யாவின் ஏரோபுளொட்( Aeroflot) விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்தே, நேற்று நண்பகல் இந்த விமானம், ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானம் SU-288  நேற்றுக் காலை 10.10 மணியளவில் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

நேற்று மதியம் 12.50 மணிக்கு மீண்டும் மொஸ்கோவிற்கு அந்த விமானம் புறப்பட இருந்தது.

அதில் பயணம் செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறுவதற்கு தடை விதித்து, கட்டுநாயக்க விமான நிலைய விமானப் பிரிவின் தலைவருக்கு,  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அயர்லாந்து நிறுவனம் ஒன்று தொடுத்த வழக்கிலேயே ரஷ்ய விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், ஏரோபுளொட் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை