கட்டுப்பாடு இழந்த லொறி மோதி கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி!
கம்பஹா, மினுவாங்கொட வீதியில் உள்ள வீதியவத்த சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துயரமான விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகமாகப் பயணித்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
முதலில் அந்த லொறி வீதியில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதியது.
அதன் பின்னர், லொறி ஒரு கார் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியின் மீதும் மோதியுள்ளது.
இந்தக் கோரச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தினை ஏற்படுத்திய லொறியில் மதுபானப் போத்தலொன்று இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த பின்னர் அங்கிருந்து தப்பியோடிய லொறியின் சாரதி, பின்னர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






