Welcome to Jettamil

உலகின் முடிவில் செல்பியால் விபரீதம்! பள்ளத்தில் விழுந்து மரக்கிளையில் தொங்கிய மாணவி

உலகின் முடிவில் செல்பியால் விபரீதம்!

Share

உலகின் முடிவில் செல்பியால் விபரீதம்! பள்ளத்தில் விழுந்து மரக்கிளையில் தொங்கிய மாணவி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், நேற்று (19) காலை தனது நண்பர்களுடன் ஹோட்டன் சமவெளிக்குச் சுற்றுலா சென்றிருந்தார். காலை 9 மணியளவில் ‘உலகின் முடிவு’ என அழைக்கப்படும் செங்குத்தான மலைச்சரிவில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அவர் சிக்கிக்கொண்டார்.

மாணவி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைக் கண்ட ஹோட்டன் சமவெளி பூங்காவின் வாகனச் சாரதி ஒருவர், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சரிவில் இறங்கி, அந்த மாணவியை மரக்கிளையிலிருந்து மீட்டு அருகிலிருந்த ஒரு பாறையில் அமர வைத்தார்.

உடனடியாக பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

நுவரெலியா 3-வது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த கொமாண்டோ வீரர்கள் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து பல மணிநேரம் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

தற்போது அவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பூங்கா மேலாளர் மஞ்சுல மொனரதென்ன தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை