இலங்கை வரவிருந்த சாந்தன் இயற்கை எய்தினார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்த இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இக் கொலை வழக்கில் சிக்கிய 07 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந் நிலையில் தமிழக அரசு மற்றும் சில இலங்கை தமிழ் ஆதரவு அமைப்புகளின் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 07 பேரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் இலங்கை வரவிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.