அம்பலாங்கொடை நகர சபை அருகில் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது.
காரில் வந்த அடையாளம் தெரியாத குழு ஒன்று, ஒரு வர்த்தகரை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் படுகாயமடைந்த அந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’ என்ற நபரின் மூத்த சகோதரியின் கணவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





