கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
குறித்த விடயத்தை சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களில் செல்லும் போது கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், குறித்த நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
அதற்காக செயலி ஒன்றையும் கிவ்.ஆர் கோட் (QR Code)ஒன்றை உருவாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த செயன்முறைக்கு இரண்டு வார காலம் எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குப் பிரவேசிப்பது தொடர்பில், சட்ட கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.