Welcome to Jettamil

யாழ் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடு..!

Share

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று தொடக்கம் புதிய நடைமுறை கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கும் ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை