Welcome to Jettamil

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

Share

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவ டிப்ளோமா கற்களை (Diploma in Youth Leadership Program) நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றையதினம் (08.09.2023) வவுனியாப் பல்களைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குறித்த டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 307 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியாப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் திரு.வை.நந்தகோபன் மற்றும் UNDP யின் திட்ட மேலாளர் திரு.மொஹமட் முசைன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில், எதிர்கால நாட்டிற்கு இளைஞர் தலைமைத்துவம் என்பது மிகவும் அவசியமான ஒன்று எனவே அதனடிப்படையில் குறித்த இளைஞர் தலைமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியினை தாம் வரவேற்பதாக கூறியிருந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை