உலக வங்கி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு பெருந்தொகை நிதி உதவியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே குறித்த மகிழ்ச்சிகரமான செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் குறித்த பெருந்தொகை நிதி உதவியை, உலக வங்கி வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படையில் குறித்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது எனத் பிரதமர் தெரிவித்துள்ளார்.