Welcome to Jettamil

யாழில் இவ்வாண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை நேற்றைய தினம் ஆரம்பம்

Share

யாழில் பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை நேற்றய தினம் ஆரம்பமாகியது.

தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை, வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இவ் வர்த்தகச் சந்தை நேற்று (11) மற்றும்  இன்றும் (12) நடைபெறவுள்ளது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்  நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், கிளி. அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ் வர்த்தக சந்தையில் பனை உற்பத்திப் பொருட்கள், தென்னை உற்பத்திப் பொருட்கள், பற்றிக் கைத்தறி ஆடைகள், பெறுமதி சேர்க்கப்பட்ட  நல்லெண்ணை, ஊதுபத்தி, பாரம்பரிய உணவு உற்பத்திகள், மட்பாண்ட உற்பத்திகள், கைப்பணிப்பொருட்கள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் என்பன சந்தைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை