இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படுவதற்கு முன், அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த ஆண்டின் இறுதி காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று நடைபெறும்.
கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதி நிறைவேற்றப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரை 4 மாத அரச சேவைகள் மற்றும் செலவுகளுக்கான நிதி இந்த கணக்கு வாக்கு பணத்தின் மூலம் ஒதுக்கப்படும்.
இந்த ஒதுக்கீடுகள் போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 2 இலட்சத்து 20,006 பில்லியன் ரூபா, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 1 இலட்சத்து 86,031 மில்லியன் ரூபா, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 1 இலட்சத்து 70,535 மில்லியன் ரூபா, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 1 இலட்சத்து 61,999.9 மில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 1 இலட்சத்து 42,925 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடு 67,361 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.