Welcome to Jettamil

இன்றைய வானில‍ை அறிவிப்பு

Share

இன்றைய வானில‍ை அறிவிப்பு

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்படக் கூடிய நிலை உள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காற்று வடகிழக்கு திசையில் மணிக்கு (25-35) கி.மீ வேகத்தில் வீசும். கொழும்பு, புத்தளம், மன்னார், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரை கடற்பரப்புகளில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு (45-50) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

கொழும்பு, புத்தளம், மன்னார், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் போன்ற கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்று வீசக்கூடும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை