இன்றைய வானிலை அறிக்கை: கனமழை எச்சரிக்கை
இன்று (24 ஜனவரி 2025) வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்ட அறிக்கையின் படி, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களுடன், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ. வரை பலத்த மழையும் பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் காலை நேரத்தில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்படுகின்றது.