Welcome to Jettamil

மார்ச் 1 முதல் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் முடங்கும்

Share

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், மார்ச் 1ஆம் திகதியில் இருந்து அனுராதபுரத்துடள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கிற்கான 120 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதையின், அனுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையான பகுதியே ஐந்து மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.

இதனால் வடக்கிற்கான அனைத்து ரயில் சேவைகளும் அனுராதபுரத்துடன் நிறுத்தப்படும்.

அனுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையான ரயில் பாதை, 92 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

வடக்கு ரயில் பாதையில் ரயில் பயணத்தை மேலும் வசதியானதாகவும், குறைந்த நேரத்துடன் பயணம் செய்வதற்கேற்ற வசதி கொண்டதாகவும் மாற்றும் வகையில் இந்த புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது வடக்கு ரயில் பாதையில் மணிக்கு 80 கி.மீ வேகத்துடன், ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்பாதை தரமுயர்த்தப்பட்ட பின்னர், ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் செல்லும் ரயில்கள் அதிகபட்ச வேகத்தில் பயணிக்க உதவும் என்றும், இது வடக்கில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை