Welcome to Jettamil

நெல்லியடியில் வைத்தியர்களின் கவனயீனத்தால் உயிரிழந்த பெண்!

Share

யாழ்பாணம், வடமராட்சி, நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கர்ப்பபை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட தரப்புக்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.

அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்திருக்கின்றதாக அறியமுடிகின்றது.

நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் புற்றுநோய் காரணமாக கர்ப்பபையை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை மேற்கொண்டிருந்த நிலையில்,

அவருடைய உடலில் துணி ஒன்று வைத்து கவனமின்மையாக தைக்கப்பட்டதால் கிருமி தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் உடலில் துணி வைத்து தைக்கப்பட்டதாலேயே கிருமி தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டிருப்பதுடன்,

அத் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி உளளிட்டோரை இன்று நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை