யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், நல்லூர், நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய, ஆரியரத்தினம் திருக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், நல்லூர் – பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய, இரட்ணசீலன் சுஜீவன் என்பவர் படுகாயமயடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக இருந்த பேருந்து தரிப்பிட சுவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.