Welcome to Jettamil

ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது குஜராத் அணி

Share

ஐ.பி.எல் கிண்ணத்தைக் கைப்பற்றி, குஜராத் டைட்டான்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. அஹமதபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில், வெற்றி பெற்று குஜராத் அணி சம்பியனானது.

இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்ஸன், முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, ஆரம்பத்திலிருந்தே மொஹமட் ஷமியிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களையே பெற்றது.

131 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத், ஆரம்பத்திலேயே ரித்திமான் சஹா, மத்தியூ வேட்டை பிரசீத் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்டிடம் இழந்த போதும் ஹர்டிக் பாண்டியா, ஷுப்மன் கில் மூலம் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.

34 ஓட்டங்களுடன் பாண்டியா ஆட்டமிழந்த போதும் டேவிட் மில்லரின் ஆட்டமிழக்காத 32 ஓட்டங்கள், கில்லின் ஆட்டமிழக்காத 45 ஓட்டங்களின் மூலம், 18.1 ஓவர்களில் குஜராத்  அணி வெற்றியிலக்கை அடைந்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை