பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் நாளை (23ம் திகதி) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவரின் விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை அடுத்து இடம்பெறுகின்றது.
இந்த விஜயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல் நடத்தவுள்ளார். அத்துடன் இவர் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.