Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிப்பு!

யாழ்ப்மாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற காலநிலை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சியானது யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டாலும் கோப்பாய், உடுவில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் இதனுடைய தாக்கம் கூடுதலாக உணரப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 அங்கத்தினர்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்களும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 அங்கத்தினர்களும் என மொத்தமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 21 அங்கத்தினர்கள் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அன்னை முன்பள்ளி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை