Welcome to Jettamil

விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு!

Share

விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தின், தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தின் விவசாய உணவு தொழில்நுட்ப கைத்தொழில்கள் கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் அதிபர் திருமதி தேவரதி சுதேஸ்கரன் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் க.சிவச்சந்திரன், வடமாகாண மாகாண திணைக்கள கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேழினி பாலேந்திரன், வடமாகாண மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், ஐ.நா உணவு விவசாய நிறுவன களத்திட்ட இணைப்பாளர் அ.வாகீசன், மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி கனகேஸ்வரி ஜெபநாமகணேசன் மற்றும் திணைக்களத்தின் சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள், தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை