ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமி
ராஜஸ்தானின் கோட்புட்லி பகுதியில் உள்ள 700 அடி ஆழமான கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுமியை மீட்கும் பணிகள் புதன்கிழமை (25) காலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) குழுக்கள், 48 மணிநேரத்திற்கும் மேலாக சிறுமி சேத்னாவை மீட்க முயற்சித்து வருகின்றன.
முதலில், 10 அடி நீளமுள்ள 15 இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
தொடர்ந்து, மீட்பு பணியாளர்கள், துழையிடத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி, செவ்வாய்க்கிழமை (24) எலி சுரங்க தொழில்நுட்பம் மூலம் கிணற்றில் குழி தோண்டி சிறுமியை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக, ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் குழாய் இறக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நான்கு ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
பதியாலி கிராமத்தில் வசிக்கும் இந்த சிறுமி, திங்கட்கிழமை (23) பிற்பகல் 2 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அப்பகுதி அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். முதலில், அவர் 150 அடி ஆழத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
தற்காலிக கருவி மூலம், மீட்பு குழுவினர் சிறுமியை 30 அடி மட்டுமே இழுக்க முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.