ருமேனியாவில் கிண்ணியாவைச் சேர்ந்த குடும்பத்தலைவர் திடீர் மரணம்: சோகத்தில் உறவினர்கள்!
தொழில் வாய்ப்புக்காக ருமேனியா நாட்டுக்குச் சென்றிருந்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த அனிபா பிர்தௌஸ் (46 வயது) என்பவர், நேற்று (09) இரவு உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா, நிஜாமியா வீதியில் வசித்து வந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
முன்னதாக இலங்கை போக்குவரத்துச் சபையில் (SLTB) நடத்துனராகப் பணியாற்றிய இவர், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ருமேனியா நாட்டுக்கு புலம்பெயர்ந்திருந்தார்.
நேற்று இரவு இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் ஜனாஸா (உடல்) தொடர்பான இறுதிக்கிரியைகளை ருமேனியாவிலேயே முன்னெடுப்பதற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
அன்னார், கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முகம்மது அனிபா அப்துல் ஹாதி என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கியாஸ் ஷாபி)





