அவசர எச்சரிக்கை: யாழ் ஊடாக இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (10.01.2026) பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கரையை ஊடறுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ சற்று வலுவிழந்த நிலையில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரையிலும், அவ்வப்போது 70 கி.மீ வரையிலும் மிக ஆவேசமாக வீசக்கூடும்.
புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை, குருநாகல், பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





