Welcome to Jettamil

ஈரானியர்களுக்கு 6 மாதங்கள் வரை அவுஸ்திரேலியா செல்லத் தடை

Share

ஈரானியர்களுக்கு 6 மாதங்கள் வரை அவுஸ்திரேலியா செல்லத் தடை

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா விசா (Tourist Visa) வைத்திருக்கும் ஈரானியர்கள் அந்நாட்டிற்குள் நுழைவதற்கு 6 மாத காலத் தடையை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய சட்டங்களின் கீழ், ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைப்பின் ஒருங்கிணைப்பையும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் வேளையில், பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையிலிருந்து சில குறிப்பிட்ட தரப்பினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள ஈரானியர்கள், ஆஸ்திரேலியக் குடிமக்கள் மற்றும் நிரந்தர விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது.

மேலும், மிக முக்கியமான வழக்குகளைத் தனித்தனியாகப் பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு மட்டும் ‘அனுமதிக்கப்பட்ட பயணச் சான்றிதழ்’ (Approved Travel Certificate) வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் தற்போதைய மோதல்கள் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்பட்ட பல சுற்றுலா விசாக்கள், இப்போது விண்ணப்பித்திருந்தால் வழங்கப்பட்டிருக்காது என அமைச்சர் டோனி பர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவே இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா நிமித்தம் ஆஸ்திரேலியா செல்லவிருந்த ஈரானியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை