அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு ஈரான் ஒருபோதும் பணியாது – ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவிப்பு
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா மீதான தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானிய மக்கள் ஒருபோதும் அதிகார அடக்குமுறைக்குத் தலைவணங்க மாட்டார்கள் என்றும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமாயின் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கடந்த கால நடத்தைகள் மற்றும் சமீபத்திய முரணான அணுகுமுறைகள் காரணமாக, ஈரான் அமெரிக்கா மீது ஆழமான வரலாற்று அவநம்பிக்கையைக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா உண்மையில் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை எனவும், ஈரானைச் சரணடைய வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு அழுத்தத்திற்கும் நாடு அடிபணியாது என்பதை பெசெஷ்கியன் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
Honoring commitments is the basis of meaningful dialogue. Deep historical mistrust in Iran toward U.S. gov conduct remains, while unconstructive & contradictory signals from American officials carry a bitter message; they seek Iran's surrender. Iranians do not submit to force.
— Masoud Pezeshkian (@drpezeshkian) April 20, 2026





