சீமானுக்கு ஆதரவாக மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு ஆதரவாகப் பிரம்மாண்ட மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஊர்வலத்தில், ‘விவசாயி’ சின்னம் மற்றும் சீமானின் உருவப்படம் பொறித்த ஆடைகளை அணிந்து ஆதரவாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.




