இஸ்ரேலிய உளவாளிக்குத் தூக்குத் தண்டனை! ஜனவரி போராட்டத்தில் சதி செய்ததாகக் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய உளவு அமைப்பிற்காகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இர்ஃபான் கயானி (Irfan Kayani) என்ற நபருக்கு ஈரான் இன்று காலை தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஈரானில் வெடித்த நாடு தழுவிய போராட்டங்களின் போது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும், நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது ஈரானிய அரசு குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஈரானிய நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்த நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை இன்று உறுதி செய்ததை அடுத்துத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
“நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எவருக்கும் இதுவே கதி” என ஈரான் இந்தத் தூக்குத் தண்டனை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டின் ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நேரடிப் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேலிய உளவாளி என முத்திரை குத்தப்பட்டு இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




