உதயநிதி ஸ்டாலின் கைது: தமிழக அரசியலில் பரபரப்பு…
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளித்திருந்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.



