சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10:45 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் கருட புராணம் காட்டும் வாழ்வு எனும் ஆண்மீக சொற்பொழிவை ஓய்வு பெற்ற வலிகாமம் கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் தேவமனோகரன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கெருடாவில் பகுதியை சேர்ந்த ஆலயம் ஒன்றிற்க்கு அதன் கட்டுமான பணிக்கு ரூபா 50000/- நிதியும் வழங்கப்பட்டது.
இதில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை சென்றவர்களுக்கு திருகோணமலை- வெருகல் முருகன் ஆலயத்தில் வைத்து நேற்று முன்தினம் புதன்கிழமை (05/06/2024) அவர்களுக்கு தேவையான சுகாதார பொருட்கள் 4. கட்டமாக வழங்கிவைக்கப்பட்டதுடன் திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அதன் வேலி அமைப்பதற்காக ரூபா 200,000 ரூபா நிதி உதவி 3ம் கட்டமாக பாடசாலை முதல்வரிடம் வழங்கிவைக்கப்பட்டதுடன்
திருகோணமலை முள்ளிப்பொத்தானை விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு நிழற்பிரதி இயந்திரம் திருத்தத்திற்காக ரூபா 30,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தமது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.