Welcome to Jettamil

யாழில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Share

யாழில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ். மாவட்ட சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றையதினம் யாழில் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகாமையில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 42 வயதுடைய சந்தேகநபர், 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை