Welcome to Jettamil

தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து

Share

தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த கோர விபத்தானது, இன்று(24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – கண்டி அரச பேருந்து ஒன்றும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தானது வீதியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த மாடுகளுடன் மோதிய நிலையில், எதிரே வந்த வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், விபத்தினாால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிசிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை