மதுரு ஓயா முகாமில் விபத்து: பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்ததில் 3 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்!
மதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 29) காலை நடைபெற்ற இராணுவப் பயிற்சியின் போது, கைக்குண்டு (Hand Grenade) வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, தற்போது இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் நடத்தப்பட்டு வரும் கூட்டு இராணுவப் பயிற்சியின் போது நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ வீரர்களுக்குக் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.





