அமெரிக்க கடற்படைக்கு அதிர்ச்சி! 240 மில்லியன் டொலர் மதிப்பிலான ‘டிரைட்டன்’ ட்ரோன் விபத்து
அமெரிக்க கடற்படையின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அதிநவீன எம்.க்யூ-4சி டிரைட்டன் (MQ-4C Triton) ஆளில்லா உளவு விமானம் கடந்த ஏப்ரல் 9-ஆம் திகதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை பாதுகாப்பு கட்டளை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 240 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த விமானம், இத்தாலியில் உள்ள கடற்படை தளத்திலிருந்து புறப்பட்டு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.
50,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம், செங்குத்தாக 9,000 அடிக்குக் கீழே சரிந்து கடலில் விழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு F-35 போர் விமானத்தை விட இரண்டு மடங்கு அதிக விலையைக் கொண்ட இந்த ‘டிரைட்டன்’ ட்ரோன், தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்து உளவு பார்க்கும் திறன் கொண்டது. அமெரிக்க கடற்படையிடம் இது போன்ற 20 விமானங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஈரானுடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில் இந்த இழப்பு அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
விமானம் விழுவதற்கு முன்னதாக அவசரக் குறியீடுகளை வெளிப்படுத்திய போதிலும், விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து அமெரிக்கா இதுவரை மௌனம் காத்து வருகிறது.





