Welcome to Jettamil

யுக்ரைனின் கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல் – இருவர் பலி

Share

யுக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 509ஆவது நாளாக நீடித்து வருகிறது.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யுக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தன் நாட்டோடு இணைத்துக்கொண்டது.

யுக்ரைனுடனான போரில் கிரிமியாவில் இருந்து ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ரஷ்யாவையும் கிரிமியாவையும் கிரிச் பாலம் இணைக்கிறது.

அதேவேளை, 19 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் புகையிரம், சாலை போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக யுக்ரைன், ரஷ்யா மாறி மாறி குற்றஞ்சாட்டிக்கொண்டன.

அதன்பின்னர் பாலத்தை ரஷ்யா மீண்டும் சரி செய்து வாகனப்போக்குவரத்தை தொடர்ந்தது.

இந்தநிலையில், ரஷ்யா – கிரிமியா இணைப்பு பாலம் கிரிச் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

யுக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பாலம் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலால் பாலத்தின் மீதான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாலம் வழியாக ரஷ்ய இராணுவத்திற்கு தேவையான பொருட்கள் அனுப்பப்பட்டு வந்ததால் அந்த நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் யுக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை