Welcome to Jettamil

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

Share

மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் இணங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பயங்கரவாதத்தின் சில வரையறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பெசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்ததத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவர் பெசில் ராஜபக்ஷ எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய தலைவர் பெசில் எனவும், கடந்த காலங்களில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை