Welcome to Jettamil

சேதன வீட்டுத்தோட்ட பயிர்ச்செயிகை தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Share

திருகோணமலை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம் .பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மூதூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் எம். எஸ் .இந்தியாஸ் அஹமட்டின் மூதூர் விவசாய விரிவாக்க நிலையத்திற்குட்பட்ட பாலை நகர் கிராமத்தில் சேதன வீட்டுத்தோட்ட செய்கை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (22)இடம்பெற்றது.

இந் நிகழ்வினை மூதூர் விவசாய போதனை ஆசிரியர் எம் எஸ் ரிபாஸ் ஒழுங்குபடுத்தியிருந்தார். இச்செயலமர்வில் சேதன பயிர்ச்செயிகையின் நோக்கம் அதன் நன்மை என்பன பற்றியும் வீட்டுத்தோட்ட மட்டத்தில் எவ்வாறு சேதன பசளைகள் தயாரிப்பது என்பன பற்றிய செயல்முறை விளக்கங்களும் இடம்பெற்றது.

அத்துடன் பயிர்களில் ஏற்படும் நோய் பீடைத்தாக்கங்கள் மற்றும் அதனை இணங்கன்டு கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விளக்கங்களும் இடம்பெற்றது.

நவீன தொழில்நுட்பங்களை விவாசாயிகளிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கில் மின்சாரம் மூலம் இயங்கும் மருந்து தெளிக்கருவி, பயிர்ச் செய்கை நிலத்தினை ஊடுபண்படுத்தும் கருவி மற்றும் பழமரங்களிற்கு குழி தயாரிப்பதற்கு பயன்படும் கருவிகள் போன்றவற்றின் பயன்பாடுகள் செய்முறைமூலம் விவசாயிகளுக்கும் வியவாசய விஞ்ஞானத்தினை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கும் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி விவசாய பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், மூதூர் வலயத்திற்குட்பட்ட விவசாய போதானாசிரியர்கள், சிறந்த விவசாய நடைமுறை உத்தியோகத்தர், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை