மகிந்தவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
வரும் மே 12-ஆம் திகதி அவர்களை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





