விலைச் சூத்திரத்தின்படி எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பதிவாகியுள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த மாத விலை திருத்தத்தின் படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.