யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (Jaffna International Airport) விரிவுப்படுத்தும் நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையங்களில், மத்தள விமான நிலையம் (Mattala International Airport) அவசரத் தரையிறக்கம் தவிர, வழமையான விமானப் போக்குவரத்துக்கு பொருத்தமானதாக இல்லையென்று சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில், இலங்கையின் மற்ற இரண்டு சர்வதேச விமான நிலையங்கள், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கி மேம்படுத்துவது குறித்துள்ள ஆர்வத்தை அரசாங்கம் காட்டி உள்ளது.
தற்போதைக்கு, ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதே வகையில், பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் தொடங்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.