முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதன் நடராஜா ரவிராஜின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது நினைவு தூபியில் இடம்பெற்றது
இதில் அமரரின் திருவுருவத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ. மாவை சேனாதிராஜா, சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தலினை செலுத்தினர்.