உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கலவரத்தில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்து அவர்கள் பயணிக்கும் வாகனங்களை கைப்பெற்றுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.