Welcome to Jettamil

நாட்டிற்குத் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் நாளை முதல் விநியோகம்

Share

நாட்டிற்குத் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் நாளை முதல் வெளியிடப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர்
தேவையான டீசல் மற்றும் பெற்றோல் நாளை முதல் விநியோகிக்கப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் பெட்ரோல் தினசரி விநியோகம் கடந்த சில நாட்களில் முறையே 3,200 மெட்ரிக் டன்கள் மற்றும் 2,800 மெட்ரிக் டன்களாக மட்டுப்படுத்தப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாளை முதல் 5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 பெட்ரோல் சந்தைக்கு வெளியிடப்படும் என சபையில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு மசகு எண்ணெய் விநியோகஸ்தர்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உத்தேசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை