வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் எச்சரித்துள்ளார்.
கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் இம் மாதத்தின் முதல் 27 நாட்களில் 265 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந் நிலைமை நீடித்தால், எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் அபாய நிலை உள்ளது.
ஆகவே பொதுமக்கள் தங்களது வாழ்விடங்கள், பணியிடங்கள் உட்பட பொது இடங்களையும் சுத்திகரித்து, நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை அழித்து ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.