பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, முன்னாள் அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்று ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த போதனைகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் கட்சி, என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பிரபாகரன் பௌத்த மக்களைக் கொன்றபோது சாதாரண தமிழர்களுக்குத் தீங்கு இழைக்கப்படவில்லை என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்றும், அவர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும், முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.