அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளப்பெருக்கு அபாயம் – மக்களே அவதானம்!
நாட்டின் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளுக்கானது. நேற்றிரவு (18) முதல் பெய்த மழையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளுக்கான இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்தில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஆகையால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களால் விழிப்புடன் இருக்க, வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.