முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே செயலாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இலங்கையை விட்டு வெளியேறிய நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். அவர் இலங்கையை சாதாரண நிலைமையில் விட்டுச் செல்லவில்லை.
அவர் மீண்டும் இலங்கை வந்தால், ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு பொருத்தமான அதே பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்படும்.
தேவையான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். எனவே அவர் மிக விரைவில் இலங்கைக்கு வருவார் என்று நாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.