Friday, Jan 17, 2025

நெல்லியடி பொலிஸாரால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

By kajee

நெல்லியடி பொலிஸாரால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு